திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் பொறுப்பேற்பு
திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளராக கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிஷ் அகர்வால் நியமிக்கப்பட்டார். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்த இவர், நேற்று திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் கடந்த 1989-ம் ஆண்டு ரெயில்வே துறையில் பணிக்கு சேர்ந்தார். தெரிந்து வட கிழக்கு ரெயில்வே, மேற்கு மத்திய ரெயில்வே, டீசல் என்ஜின் நவீனமயமாக்கல் பிரிவு உள்பட பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளார்.
மேலும் பாட்டியாக பாட்டியாலாவில் உள்ள ரெயில்வே பணிமனை, சித்தரஞ்சன் லோகோமேட்டிவ் ஒர்க்ஸ் உள்ளிட்ட இடங்களிலும், முதன்மை பணிமனை மேலாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட மணிஷ் அகர்வாலுக்கு ரெயில்வே அதிகாரிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.