திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தினை ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் தொழில் முனைவோருக்கு தேவையான பல்வேறு வகையான சேவைகளை ஒரே இடத்தில் வழங்கிடும் வகையில் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தினை மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்தார்.