மண்ணச்சநல்லூர் மாதிரி தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் ஆய்வு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உரை ஊராட்சி ஒன்றிய மாதிரி தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், நேரில் ஆய்வு செய்தார். பின் னர் ,மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவர்களுக்கு சிறப்பான முறையில் கல்வி கற்றுத்தரவும், தேவையான அடிப்படை வசதிகளைச் செய்திடவும் தலைமையாசிரியர் மற்றும் அலுவலர்களிடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.