மாவட்ட ஆட்சியரகத்தில் சூரியஒளி மின்தகடுகள் இயக்கம் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், ரூபாய் 5.50 இலட்சம் மதிப்பில், சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரித்து அலுவலகத்தின் மின்தேவைக்கு பயன்படுத்துகின்ற வகையில் பொருத்தப்பட்ட, சோலார் மின் தகடுகள் இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார், இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.6.22) தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. இரா.அபிராமி, அவதா நிறுவனத்தின் திட்ட மேலாளர் எஸ்.கதிரேசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.