திருச்சி புத்தக திருவிழா ‘லோகோ’ அமைச்சர்கள் வெளியிட்டனர்
திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் திருச்சி புத்தகத் திருவிழா லோகோவை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் வெளியிட்டனர். இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், தியாகராஜன், பழனியாண்டி, கதிரவன், துணைமேயர் திவ்யா, மாவட்ட ஊராட்சித்தலைவர் ராஜேந்திரன், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்