விவசாயிகளுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் விவசாயிகளுக்கான கட்டணமில்லா தொலைபேசி 93429 12122 எண்ணை அறிமுகம் செய்து வைத்தார். உடன் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மல்லிகா, கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஜெயராமன் ஆகியோர் உள்ளனர்.