அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

0 284
Stalin trichy visit

திருச்சி மாவட்டம்,முசிறி அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் தடுப்பு மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் தலைமையில் 13.09.22 நடைபெற்றது. முசிறி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் யாஸ்மின், குழந்தை நலக் குழு உறுப்பினர் முனைவர் பிரபு ஆகியோர் போதைப்பொருள் மாணவர்கள் (குழந்தைகள்) பயன்படுத்துவதால் உடல் அளவில், மனளவில் ஏற்படும் பாதிப்புகள் எதிர்காலத்தில் சந்திக்கும் உடல் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும், குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2006 ன் படி குழந்தை திருமணத்துக்கு உதவி செய்தாலோ, உடந்தையாக இருந்தாலோ, திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலோ சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பு சட்டம் 2012ன் படி பாலியல் தொல்லை,பாலியல் துன்புறுத்தல் பாலியல் தொந்தரவு செய்தாலோ மற்றும் பாலியல் வன்முறை குழந்தைக்கு நடந்து தெரிந்தும் குழந்தைக்கு உதவி செய்யாமல் இருந்தாலோ இச்சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும், குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதும்,வேலை செய்ய அனுமதிப்பதும் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதற்கான சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும் மேலும் கல்வியின் அவசியம், குழந்தைகளின் தன்னம்பிக்கை, உயர்கல்விக்கு செல்வதற்கான வழிமுறைகள் சார்ந்த வாழ்க்கைக் கல்வி குறித்தும் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 10 9 8 செயல்பாடு, பணிகள் குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள். முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் காவேரி, முசிறி காவல் நிலைய குழந்தை நல காவல் அலுவலர் பிரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு குழந்தைகள் மீதான வன்முறை குறித்த துண்டு பிரசுரங்கள்,நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.