ஆலம்தெரு புனித செல்வநாயகி அன்னை ஆலய தேர்த்திருவிழா
திருச்சி ஆலம்தெரு புனித செல்வநாயகி அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டத்தை மாநகராட்சி கவுன்சிலர் திரு எல் ரெக்ஸ் அவர்கள் துவக்கிவைத்தார். முன்னதாக பங்குத்தந்தை அருள்திரு சகாயராஜ், உதவி பங்குத்தந்தை ஜான் ஆகியோர் புனிதப்படுத்தினர். சிறப்பு அழைப்பாளர்களாக கவுன்சிலர் லீலா வேலு, திரு ஆரி, திரு சீனிவாசன் கலந்துகொண்டனர். நிகழ்வில் திரு பேசில், ஆசிரியர் லூயிஸ், திரு பீட்டர், திரு அருண் செபாஸ்டியன், திரு ரூபன், திரு பாலா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.