திருச்சியில் போதை ஊசி செலுத்திக்கொண்ட நபர் உயிரிழப்பு
திருச்சி, ஜூன் 30 திருச்சி காந்தி மார்க்கெட் கல்மந்தை காலனி பகுதியை சேர்ந்தவர் இளைஞர் ராஜமாணிக்கம். இந்நிலையில் இவர் இன்று அப்பகுதியிலுள்ள பொதுக்கழிப்பறையில் போதை ஊசி செலுத்திய நிலையில் உயிரிழந்துள்ளார். போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் உயிரிழந்தது குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜூன் எட்டாம் தேதி திருச்சியில் லாட்ஜில் நண்பர்களுடன் போதை ஊசி செலுத்திய பெண் பரிதாப உயிரிழப்பு – இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், திருச்சி மாநகரில் போதை ஊசி கலாச்சாரம் அதிகரித்து வருவதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.