போலி பாஸ்போர்ட்டில் பயணித்தவர் கைது
திருச்சி, செப்.30 சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிகளை இமிகிரேசன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பேது சிவகங்கை மாவட்டம் திருமயம் இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி(50) என்பவர், போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்று சிங்கப்பூர் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை விமான நிலைய காவல்துறையினர் ஒப்படைத்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.