தனிப்பிரிவு காவல்துறையினர் பணியிடமாற்றம்
திருச்சி, செப். 30 திருச்சி மாவட்ட தனிப்பிரிவில் மணப்பாறை உட்கோட்டத்தில் பணியாற்றி வந்த காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன் திருவெறும்பூர் உட்கோட்டத்துக்கும், சிறுகனூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய முதல்நிலை காவலர் முத்துக்குமார் கொள்ளிடம் காவல் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றிய பி.சத்தியமூர்த்தி சிறுகனூருக்கும், புத்தாநத்தம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த முதல்நிலை காவலர் சுரேஷ்குமார் வளநாடு காவல் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றி வந்த காவலர் அழகேஸ்வரன் புத்தாநத்தத்துக்கும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவிட்டுள்ளார்.