சர்வதேச முதியோர் தினத்தையொட்டி முதியோர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு
திருச்சிராப்பள்ளி கண்டோன்மெணட், ஒய். டபிள்யூ .சி .ஏ , கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் இன்று (1.10.22) நடைபெற்ற சர்வதேச முதியோர் தின விழாவில் பங்கேற்ற முதியோர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. பிரதீப் குமார், சால்வை அணிவித்துப் பாராட்டி, அவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைத்து, தேர்தல்களில் வாக்களித்து வரும் என்பது வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார் இந்நிகழ்வில் மாவட்ட சமூகநல அலுவலர் மா.நித்யா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி.பொ.ரேணுகா, தேர்தல் வட்டாட்சியர் திரு.முத்துச்சாமி, மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவர் திரு.பி.மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.