தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை
திருச்சி, அக். 26 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான மாதிரி ஒத்திகை பயிற்சி அரசு முதன்மை செயலாளர் பொதுப்பணித்துறை மற்றும் திருச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மணிவாசன், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். உடன் மாநகர ஆணையர் வைத்திநாதன், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிச்சை உள்ளிட்ட பலர் உள்ளனர்.