கடன் வழங்க மறுக்கும் கூட்டுறவு வங்கியை கண்டித்து விவசாயிகள் முற்றுகை
பெருவளநல்லூரில் கடன் வழங்க மறுக்கும் கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகை.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளநல்லூரில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு கடன் தர மறுத்ததால் வங்கியை முற்றுகையிட்டனர்.
பெருவளநல்லூர் கிழக்கு, பெருவளநல்லூர் மேற்கு உள்ளிட்ட கிராமங்களில் வசித்து வரும் விவசாயிகளுக்கு கடந்த 40, ஆண்டு காலமாக கூட்டுறவு பயிர் கடன் வழங்கி வருகிறது.பயிர் கடன் பெறும் விவசாயிகள் குமுலூர், இடங்கிமங்கலம், காட்டூர், பல்லபுரம், பூவாளூர், சிறுமயங்குடி, தச்சன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகள் இந்த வங்கியில் தான் 40 ஆண்டுகளுக்கு மேலாக கடன் பெற்று வருவதாகவும் கூறுகின்றனர். தற்பொழுது சம்பா சாகுபடிக்கு நாற்றாங்கால் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் நடவு பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு விவசாயத்திற்கு பெருவளநல்லூர் கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் வழங்க வங்கி அதிகாரிகள் உள்ளூரில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என கூறி வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் வங்கியை முற்றுகையிட்டு பூட்டு போடும் போராட்டம் நடத்தி வருகின்றனர் இதுகுறித்து கூட்டுறவு வங்கி தலைவர் கேசவன் விவசாயிகளின் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.