முசிறி ஒன்றியத்தில் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றியம், பெரமங்கலம் கிராமத்தில் கொரோனா தொற்றை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தடைசெய்யப்பட்ட பகுதியை மாவட்ட ஆட்சியர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் முசிறி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்மோகன், ராஜேந்திரன் உள்ளனர்.