ஆசிரியராக மாறிய மாவட்ட ஆட்சியர்
திருச்சி, ஜன.10 திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், வளநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் சென்று பள்ளி வளாகத்தை பார்வையிட்டு, வகுப்பறைக்குச் சென்று பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி, கல்வி கற்பிக்கும் முறைகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்து மாணவிகளுடன் கலந்துரையாடினார்.