கொரோனா தடுப்பூசி அவசியம் குறித்து விழிப்புணர்வு : மாவட்ட ஆட்சியர் அறிவுரை
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் கம்பூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடுவதன் அவசியத்தை பொதுமக்களுக்கு விளக்கி மாவட்ட ஆட்சியர் சிவராசு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் உப்பிலியபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகரன், லலிதா, உதவிப் பொறியாளர் பாலாஜி ஆகியோர் உள்ளனர்.