கொத்தடிமைத் தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்து பயிற்சி வகுப்பு
திருச்சி, பிப். 4 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்து வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை, காவல்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கான பயிற்சி வகுப்பைத் தொடங்கித் வைத்து கொத்தடிமைத் தொழிலாளர்கள் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தொழிலாளர்கள் உதவி ஆணையர் (அமலாக்கம்), வெங்கடேசன் உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.