அங்கன்வாடி மையத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
திருச்சி, பிப்.23 திருச்சி மாநகராட்சி, கல்லுக்குழி அங்கன்வாடி மைத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் முன்னிலையில் இன்று நேரில் பார்வையிட்டு குழந்தைகள் வளர்ச்சி, எடை மற்றும் உயரம் ஆகியவற்றை கண்காணித்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் மற்றும் கற்பிக்கப்படும் முன்பருவ கல்வி முறைகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்து குழந்தைகளிடம் கலந்துரையாடினார். உடன் மாவட்ட திட்ட அலுவலர் (ஒ.கு.வ.தி) ரேணுகா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.