அரசங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, ஏப்.19 திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், அரசங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் மருந்து இருப்பு, பணியாளர்கள் விபரம் உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி மருத்துவரிடம் கேட்டறிந்தார்.