மத்திய மண்டல காவல்துறை தலைவர் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாம்
திருச்சி, மே 10 தமிழக முதலமைச்சர், காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோரின் உத்தரவின் படி பொதுமக்கள் குறை தீர்வு முகாம் இன்று திருச்சி மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பொதுமக்கள் 207 பேர் கலந்து கொண்டனர். 150 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.