அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
திருச்சி மாவட்டம் துறையூர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தெற்கு ஒன்றியம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பரஞ்சோதி கலந்து கொண்டு கிளைக் கழக நிர்வாகிகளிடம் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை பெற்றுக் கொண்டார். அவர் கூறியதாவது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருக்கும் பொழுது கழகத்தில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உறுப்பினர்களாக இருந்ததாகவும் தற்போது கழகப் பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான அண்ணன் எடப்பாடி யார் 2 கோடி தொண்டர்களாக உயர்த்த வேண்டும் என்ற வகையில் நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார் அதன்படி திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மணச்சநல்லூர் முசிறி ஸ்ரீரங்கம் துறையூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் துறையூர் தெற்கு ஒன்றிய கழகத்தில் தான் அதிகப்படியான உறுப்பினர் படிவம் வந்துள்ளதாகவும் சுமார் ஆயிரம் படிவங்கள் வர உள்ளதாகவும் அதனால் மாவட்ட நிர்வாகம் துறையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசனை பாராட்டுவதாகவும் தெரிவித்து பொன்னாடை அணிவித்து கௌரவித்தார் இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி மாவட்ட துணை தலைவர் வேம்பு ஒன்றிய செயலாளர்கள் சேனை செல்வம் அழகாபுரி செல்வராஜ் ராம் மோகன் ராஜமாணிக்கம் நகர செயலாளர் பாலமுருகவேல் பேரூர் கழக செயலாளர் ராஜேந்திரன் ராஜாங்கம் மற்றும் மாவட்ட பிரதிநிதி ஆதனூர் பாலசுப்பிரமணியன் சொரத்தூர் ரமேஷ் கண்ணதாசன் தெற்கு ஒன்றிய பொருளாளர் ராம்குமார் பாசறை செயலாளர் ஆதனூர் செல்வராஜ் மாணவர் அணி செயலாளர் சிவசாந் மனோகரன் துணை செயலாளர் சரவணன் இணை செயலாளர் இந்து
முன்னாள் சேர்மன் மனோகரன் முன்னாள் வழக்கறிஞர்கள் செந்தில்குமார் ராமசாமி மற்றும் ஆட்டோ செல்வம் வேங்கை முருகையா வைரி செட்டிபாளையம் ராஜேந்திரன் வினோத். ராஜதுரை
உள்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்