ஏரியை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

0 259
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 15 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள நெடுங்கூர் தண்ணீர் பந்தலில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள நெய்குளம் சர்வே எண் 126/2 5.64 ஏக்கரில் உள்ள ஏரியை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரிடம் பொதுமக்கள் சார்பில் இன்று மனு அளித்தனர்.
நெடுங்கூர் தண்ணி பந்தலில் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த நெய்க்குளம் சர்வே எண் 126/2. 5.64 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியை தனிநபர் ஆக்கிரமித்தும் கரையில் இருந்த விநாயகர் சிலை, இரண்டு நாகசிலைகள் புதைத்து ஆலமரம், அரசமரம், வேப்பமரம் ஆகிய மரங்களை அனுமதியின்றி வெட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நெய்க்குளம் பொதுமக்கள் சார்பில் மகிழ்ச்சி மக்கள் நல அறக்கட்டளையின் இணை இயக்குனர் வழக்கறிஞர் நேச மனோகர் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் மனு அளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.