ஏரியை ஆக்கிரமித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

0 322
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள நெடுங்கூர் நால் ரோட்டில் தண்ணீர் பந்தலில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள நெய்குளம் சர்வே எண் 126/2 5.64 ஏக்கரில் உள்ள ஏரியை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வலியுறுத்தி மகிழ்ச்சி மக்கள் நல அறக்கட்டளை மற்றும் பொதுமக்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெடுங்கூர் தண்ணி பந்தலில் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த நெய்க்குளம் சர்வே எண் 126/2. 5.64 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியை தனிநபர் ஆக்கிரமித்தும் கரையில் இருந்த விநாயகர் சிலை, இரண்டு நாகசிலைகள் புதைத்து ஆலமரம், அரசமரம், வேப்பமரம் ஆகிய மரங்களை அனுமதியின்றி வெட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டுமென நெய்க்குளம் பொதுமக்கள் மற்றும் மகிழ்ச்சி மக்கள் நல அறக்கட்டளையின் இணைந்து இணை இயக்குனர் வழக்கறிஞர் நேச மனோகர் தலைமையில் நெடுங்கூர் நால் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.