தில்லைநகர் புதிய சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு
திருச்சி, ஜுன் 29 திருச்சி மாவட்டம் தில்லைநகர், அரசு வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய சார்பதிவாளர் அலுவலகத்தை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், தியாகராஜன், பழனியாண்டி, துணைப்பதிவுத்துறை தலைவர் இராமசாமி, உதவி பதிவுத்துறை தலைவர் ராஜா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ராஜேந்திரன், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.