திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு மக்கள் சக்தி இயக்கம் பாராட்டு
திருச்சி மாவட்ட அலுவலத்தில் திங்கள்தோறும் மனு வழங்கும் நாள்களில் முதியோர்கள், தாய்மார்கள் மற்றும் பொதுமக்கள் வருவதை அறிந்து புதிதாக கொட்டக்கை, குடிநீர் கேன், அத்துடன் தற்பொழுது வருகின்றவருக்கு இலவசமாக சாக்கரை, ரத்த அழுத்தம் (BP) போன்றவை பரிசோதனை செய்து கொள்ள வசதி செய்து இருக்கிறார்கள் .இதனை மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்ட நிர்வாகத்தை பாராட்டுகிறது.
மேலும் கொட்டகையில் பேன், கழிவறை , தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு பாலூட்ட அறை போன்ற வசதிகள் செய்து தருமாறு திருச்சி மாவட்ட நிர்வாகத்தை மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.