பகலிலும் எரியும் தெருவிளக்குகள்: மாநகராட்சி அதிகாரிகள் கவனிப்பார்களாக?

0 447
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 3 திருச்சி வயலூர் ரோடு, 5வது மெயின்ரோடு, சீனிவாசநகர், திலகர் தெரு, பேங்கர்ஸ் காலனி, அம்மையப்பநகர் உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் 15 நாட்களாக தெரு விளக்குகள் 24 மணி நேரமும் எரிந்து வருகிறது. தெருவிளக்கு பராமரிப்பு முன்பு மாநகராட்சியில் இருந்தது. அதனால் அந்தந்த பகுதியில் மாலை 6 மணிக்கு தெருவிளக்குகளை எரியவிட்டு, காலை 6 மணிக்கு நிறுத்திவிடுவார்கள். ஆனால் தற்போது தெருவிளக்கு பராமரிப்பு தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதால், தெருவிளக்குகளை 24 மணி நேரமும் எரிந்து வருகிறார். இதனால் மாநகராட்சி இழப்பு ஏற்படுத்தி வருகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.