வா.உ.சி 150வது பிறந்தநாள் – மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் அன்பில் மகேஷ்
சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்தசெம்மல்
வா. உ. சிதம்பரனார் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வா. உ. சிதம்பரனார் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி கண்டோன்மென்ட் அருகில் அமைந்துள்ள வா.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் இந்நிகழ்வில் கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்
கே.என் சேகரன், கோவிந்தராஜன், வன்னை அரங்கநாதன், செந்தில், கே.எஸ்.எம் கருணாநிதி நகரக் கழகச் செயலாளர் மைக்கில் மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் மதிவாணன் பேரூர் கழக செயலாளர் கருப்பையா மற்றும் மாவட்ட ஒன்றிய பகுதி நகர பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
