உலக புத்தக தின போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பரிசு வழங்கி பாராட்டு
திருச்சி, ஜூலை 13 திருச்சி மாவட்ட மைய நூலக கூட்டரங்கில் வாசகர் வட்டம் சார்பில் இன்று நடைபெற்ற உலக புத்தக தின போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பரிசுகள் வழங்கி பாராட்டி, கொடையாளர்களை கவுரவித்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட மைய நூலக அலுவலர் சிவக்குமார், மண்டல தலைவர் மதிவாணன், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.