ஆளுநரை வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து இயக்கம்
புதுக்கோட்டை, ஜூலை 28 சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட முன்வடிவில் (மசோதாவில்) ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்திட வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் புதுக்கோட்டையில் தொடங்கியது.

சித்த மருத்துவப் பல்கலைக்கழக வேண்டுகைக் குழு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அதன் ஒருங்கிணைப்பாளர் சீ.அ. மணிகண்டன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே. செல்லபாண்டியன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி கையெழுத்துகளைப் பெற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து வழங்க இந்தக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.