8 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு
திருச்சி: திருவெறும்பூர் அருகே 8 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சப்பானி என்பவர் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு தேதியை ஏழாம் தேதிக்கு மாற்றி திருச்சி மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பாபு உத்தரவிட்டார்.