லாரி மோதி நர்ஸிங் கல்லூரி மாணவி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ஹேன்ஷினி பிரியா (17). நர்ஸிங் கல்லூரி மாணவி. இவர் தனது தாயார் சாந்தா மார்கரெட் மேரியுடன் மஞ்சம்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் பொத்தமேட்டுப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது நொச்சிமேடு என்ற இடத்தில் லாரி மோதி படுகாயமடைந்து உயிரிழந்தார். மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.