திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் ரூ.23 இலட்சம் பறிமுதல்
திருச்சி, ஆக.9 திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியா செல்வதற்காக காத்திருந்த பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் ஒரு ஆண் பயணியை சோதனை செய்ததில் அவர் உடம்பிலும், உள்ளாடையிலும், செருப்பிலும், செல்போன் உறையிலும், மணிபர்சிலும் மறைத்து கொண்டுவந்த 1லட்சத்து 8ஆயிரம் சவுதி ரியால் கரன்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கரன்சியின் இந்திய மதிப்பு சுமார் 23லட்சத்து 11ஆயிரம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
