மணப்பாறையில் நீர் நிலைகள் தூர்வாரும் பணி தொடக்கம்
மணப்பாறை பகுதியில் நீர் நிலைகள் தூர்வாரும் பணிகளை துவக்கிவைத்த ஒன்றியக்குழு தலைவர்.
திருச்சி, ஆக.9 திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம் உசிலம்பட்டி ஊராட்சியில் உசிலம்பட்டி மற்றும் மலையடிப்பட்டி ஊராட்சியில் கரட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் நீர் நிலைகளை தூர்வாரும் பணிகளை மணப்பாறை ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி துவக்கிவைத்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர் பார்வதி முருகேசன் ஊராட்சி மன்ற தலைவர்கள் கணேசன், பாலகுமார் மற்றும் துணை தலைவர்கள் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.