முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்
முத்தமிழறிஞர் கலைஞர் பயின்ற திருக்குவளைத் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றியில் புதிய அத்தியாத்தை எழுதத் தொடங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியில் திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட நவல்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை பள்ளிக்கல்வித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.