புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை தொடக்கம்
தஞ்சை, ஆக.30 தஞ்சை தமிழ்பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் தமிழ் பல்கலைக்கழக மகளிர் மற்றும் ஆடவர் விடுதி வழியாக புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களுக்கு புதிய பேருந்து வழித்தடத்தில் மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), நீலமேகம் (தஞ்சாவூர்) ஆகியோர் இன்று பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். உடன் மாநகராட்சி மேயர் இராமநாதன், தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் உள்பட பலர் உள்ளனர்.