மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார் அமைச்சர் கே.என்.நேரு
திருச்சி மாவட்டம் இலால்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட ரூ. 1.38 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். உடன் சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ. ஒன்றியக்குழுத் தலைவர்கள் ரவிச்சந்திரன், ரசியா கோல்டன் ராஜேந்திரன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் முத்துச்செழியன், உறுப்பினர்கள், தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆதிநாயகிரவி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் உள்பட பலர் உள்ளனர்.