கல்லக்குடி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
திருச்சி, நவ. 29 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை .
கல்லக்குடி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறப்படும் கீழ்க்கண்ட பகுதிகளான கல்லக்குடி வடுகர்பேட்டை பளிங்காநத்தம் மேலரசூர், மால்வாய், சரடமங்கலம்,எம். கண்ணனூர், ஒரத்தூர், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, ஆமரசூர், தார்பாய், வரக்குப்பை, சிறுகளப்பூர், அழுந்தலைப்பூர், கருட மங்கலம், வந்தலைக் கூடலூர், சிறுவயலூர், காணக்கிளியநல்லூர், பெருவளப்பூர், தச்சங்குறிச்சி, புஞ்சை சங்கேந்தி,விசிபுரம், கோவண்டாக்குறிச்சி, புதூர் பாளையம், ஆலம்பாக்கம்,விரகாலூர்,ஆ. மேட்டூர், நத்தம், திருமாங்குடி, டி. கல்விக்குடி ,ஆலங்குடி மகாஜனம்,செம்பரை, திண்ணியம், அரியூர் கல்லகம், கீழரசூர. மற்றும் புள்ளம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இயக்கலும் காத்தலும் லால்குடி கோட்ட செயற்பொறியாளர் அன்பு செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.