தேமுதிகவினர் அன்னதானம் வழங்கல்
திருச்சி, டிச. 18 தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பியதற்காகவும் மீண்டும் முழு நலத்துடன் கழகப் பணி ஆற்றுவதற்காகவும் வேண்டி திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள காட்டழகியி சிங்கப்பெருமாள் கோவிலில் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில்நேற்று சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது .
இந்நிகழ்வில் மாநில மாற்றுத்திறனாளி துணைச் செயலாளர் வாஞ்சி குமரவேல் , ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் சக்திவேல் , மேலூர் சதீஸ் குமார் (தலைமை பொதுக்குழு உறுப்பினர்) ,லட்டு வைத்தியநாதன் பகுதி அவைத்தலைவர் பாலாஜி ,பொருளாளர் மாரியப்பன் ,பகுதி துணைச் செயலாளர் தங்கதுரை ,ஜோதிராம் ,லட்சுமணன் ,மாவட்ட பிரதிநிதி கணேசன் , குமார் , துரைராஜ் ,வார்டு செயலாளர்கள் சுரேஷ் மணிகண்டன் , ரெங்கன் ,ரங்கராஜ் பகுதி நிர்வாகிகள் அன்பழகன் , சசிகுமார் , ரவிகுமார் , பீட்டர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.