திருச்சி அருகே மரத்தில் கார் மோதி விபத்து : பெண்கள் 2 பேர் பலி
திருச்சி மாவட்டம் சமயபுரம் கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அருள்மொழி (49), தனம் (80). இவர்கள் பெரம்பலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று சமயபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு மீண்டும் திரும்பி வந்துள்ளனர்.
அப்போது சிறுகனூர் அருகே ரெட்டிமாங்குடி பிரிவு சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் மோதியது. இதில் 2 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.