துறையூர் அருகே மழையால் நெற் பயிர்கள் சேதம் : விவசாயிகள் கவலை
திருச்சி, ஜூன் 7 துறையூர் அருகே மழையால் நெற் பயிர்கள் சேதம் விவசாயிகள் கவலை
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கானாபாடி மற்றும் நரசிங்கபுரம் உள்ள விவசாயிகள் சுமார் 200 ஏக்கருக்கு மேல் குறுவை நெல் சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் தொடர்ந்து ஒரு மாத காலமாக மழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் சாய்ந்து சேதமடைந்துள்ளதாகவும் இதனால் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர் உடனடியாக தமிழக அரசு தங்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்