திருச்சி மாநகராட்சியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
திருச்சி, ஜூன் 12 திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் இன்று மேயர் மு. அன்பழகன் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. மேயர் மு. அன்பழகன் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழியை வாசிக்க மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக் கொண்டார்கள்.
இந்நிகழ்வில் துணை ஆணையர் நாராயணன், நகர் நல அலுவலர் மணிவண்ணன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.