மணப்பாறையில் பக்ரீத் சிறப்பு தொழுகை
திருச்சி, ஜூன் 17 மணப்பாறையில் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்
முஸ்லீம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இதே போல் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள ஈத்கா திடலில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்து கொண்டு தொழுதனர். அதன் பின்னர் சிறப்பு பிராத்தனையும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து புத்தாடை அணிந்திருந்து தங்களின் மகிழ்ச்சியை வெளிபடுத்திய முஸ்லீம்கள் அன்பை பரிமாறிக் கொள்ளும் வகையில் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக் கொண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். ஆயிரக்கணக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர்.