தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் : மேயர் அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, ஆக. 3 தியாகி தீரன் சின்னமலை 219-வது நினைவு நாள் – மேயர் அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர
சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை அவர்களின் 219வது நினைவு நாளை முன்னிட்டு
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு திராவிட முன்னேற்றக் கழக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மேயர் அன்பழகன் ஆகியோர் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..
இந்த நிகழ்ச்சியில் கொங்குநாடு பேரவை மாவட்ட தலைவர் சேகர், தொழிற்சங்க முன்னேற்ற சங்க திருச்சி மண்டல பொது செயலாளர் குணசேகரன், பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜி மோகன் தாஸ் நாகராஜன், மாமன்ற உறுப்பினர் விஜய ஜெயராஜ் மற்றும் கலைச்செல்வி உடன் இருந்தனர் இதே போல் மதிமுக சார்பில் மதிமுக மாநில துணை பொது செயலாளர் டாக்டர் ரொகையா தலைமையில் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..