சிறார் படைப்பாளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு
திருச்சி, ஆக. 17 திருச்சி தெப்பக்குளம் அருகில் உள்ள பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் இன்று(17.08.2024) பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற சிறார் இதழ்களில் பங்களித்த
மாணவ படைப்பாளிகளை பாராட்டும் விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிறார் படைப்பாளிகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், இணை இயக்குநர் அமுதவல்லி , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மண்டல தலைவர்மதிவாணன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர். .