37 ஆண்டுகள் பணியாற்றிய ரயில்வே அலுவலருக்கு பணி ஓய்வு – பாராட்டு

0 1,460
Stalin trichy visit

திருச்சி, ஆக. 31  பொன்மலை ரயில்வே பணிமனையில் 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரிக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.

பொன்மலை ரயில்வே பணிமனை தொழிலாளர்கள், அதிகாரிகள் ஓய்வு பெறும் போது  கவுரப்படுத்தி வழியனுப்பது வழக்கம்.

37 ஆண்டுகள் ரயில்வே பணிமனையில் பல பிரிவுகளில் பணி புரிந்து அதிகாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் சிறப்பாக சேவை செய்த சீனியர் செக்சன் இன்ஜினியர் அஜய் குமார் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.

விழாவில், ரயில்வே தொழிலாளர்கள், அதிகாரிகள் சால்வை அணிவித்து, நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.

நிகழ்ச்சியில் ரயில்வே திருச்சி கோட்ட உயர் அதிகாரி கிளமெண்ட் பர்னபாஸ், சமூக சேவகர் கே.சி. நீலமேகம், பணிமனை சீனியர் செக்சன் இன்ஜினியர்கள் ரவி, நாராயணன், கோபால்சாமி, கண்காணிப்பாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்கள் .

Leave A Reply

Your email address will not be published.