குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
திருச்சி, ஆக.12 திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் ஏற்பாட்டில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
துளசி பார்மசி யின் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு கண்டறிதல் வாசன் கண் மருத்துவமனையின் கண் பரிசோதனை சிப்லா கம்பெனியின் நுரையீரல் பரிசோதனை முகாமை மாண்புமிகு முதன்மை சார்பு நீதிபதி P. கௌதமன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் முல்லை சுரேஷ், துணை தலைவர் சசிகுமார், மூத்த வழக்கறிஞர் மாரியப்பன், முன்னாள் அரசு வழக்கறிஞர் சவரிமுத்து, முன்னாள் துணைத் தலைவர் ஸ்ரீராம் நீதிமன்றத்திற்கு வந்த காவலர்கள் நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் என 500க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன்பட்டனர்.