கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம்

0 209
Stalin trichy visit

திருச்சி, செப். 17 தேசிய வெக்கை நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் மூலம் கன்று வீச்சு நோய் தடுப்பூசி (NADCP- Brucellosis Vaccination) திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஏற்கனவே மூன்று சுற்றுகள் கன்று வீச்சு நோய் தடுப்பூசிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்சமயம் 18.09.2024 முதல் 15.10.2024 முடிய தொடர்ந்து 27 நாட்களுக்கு 4வது சுற்று கன்று வீச்சு நோய் தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இத்தடுப்பூசி 4 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரையுள்ள கிடேரி கன்றுகளுக்கு மேற்கொள்ளப்படவுள்ளது.

இத்தடுப்பூசிப் பணியின்போது 4 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரையுள்ள கிடேரி கன்றுகள் கண்டறியப்பட்டு, அவைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டு, காதுவில்லைகள் பொருத்தப்பட்டு, இத்தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்படும். தடுப்பூசிப் போடப்படும் கிராமங்களுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்கள் மூலமாக முன்னறிவிப்பு செய்யப்பட்டு இப்பணி மேற்கொள்ளப்படும்.

கிடேரி கன்று வைத்துள்ள விவசாய பெருமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொண்டு தங்களது கன்றுகளுக்கு ஏற்படும் கன்று வீச்சு நோய் தடுப்பூசிப் (Brucellosis Vaccination) போட்டுக் கொள்ள அருகிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகிடுமாறும், கன்றுகளுக்கு தடுப்பூசிப் போட்டுக் கொண்டு பயனடையுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சி மா.பிரதீப் குமார்  தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.