துறையூர் பகுதியில் நாளை மின்தடை

0 155
Stalin trichy visit

திருச்சி, செப். 17 மாதாந்திர பராமரிப்புபணிகளுக்காக 18.09.22024 புதன்கிழமைஅன்று துறையூர் 110/22-11 KVமற்றும் கொப்பம்பட்டி110/33-11KV மற்றும் து.ரெங்கநாதபுரம்33/11KV மற்றும் த.முருங்கப்பட்டி -33/11KV துணை மின்நிலையங்களில் மின்சாரம் பெறும்பகுதிகளான துறையூர், முருகூர், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர்,சிக்கத்தம்பூர்பாளையம், சேருகாரன்பட்டி,ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுப்பட்டி,நாகலாபுரம், கோம்பைபுதூர், செங்காட்டுப்பட்டி,சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி,நல்லவண்ணிப்பட்டி,பகளவாடி, புதியவீட்டுவசதிவாரியகுடியிருப்பு (Housing Board), அம்மாப்பட்டி, முத்தயம்பாளையம், நல்லியம்பாளையம்,புளியம்பட்டி, கரட்டாம்பட்டி,காளிப்பட்டி,CSI, பெருமாள்மலைஅடிவாரம், கிழக்குவாடி, கீழக்குன்னுப்பட்டி,சித்திரப்பட்டி,கொத்தம்பட்டிகொல்லப்பட்டி,எரகுடி, வெங்கடேசபுரம், கலிங்கமுடையான்பட்டி கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், B.மேட்டூர், காஞ்சேரிமலைபுதூர், சோபனபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சைமலை,கிருஷ்ணாபுரம் நரசிங்கபுரம்,கோவிந்தபுரம், மருவத்தூர்,செல்லிபாளையம், செங்காட்டுப்பட்டி,வேங்கடத்தானூர், பெருமாள்பாளையம், த.முருங்கப்பட்டி, த.மங்கப்பட்டிமற்றும் த.பாதர்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு காலை 9:45 மணிமுதல் மாலை4:00மணிவரை மின்விநியோகம் இருக்காது.

மேலும் மின்வரியத்தின் உயர் மற்றும் தாழ் அழுத்த மின் பாதைகளுக்கு அருகில் போதிய இடைவெளி விட்டு கட்டிடங்கள் கட்டவேண்டும். வரவிருக்கும் பருவமழை காலங்களில் மின்கம்பம், மின்இழுவை கம்பிகளில் கால்நடைகளை கட்டாமல் இருக்கவேண்டும் மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை உரிய பிரிவின் அனுமதி பெற்று வாரியபணியாளர்களின் முன்னிலையில் அகற்றவேண்டும். வயல்வெளிகளில் மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றம் எனவும் துறையூர் கோட்டம் செயற்பொறியாளர் பொன். ஆனந்தகுமார் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.