நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
திருச்சி, செப். 23 திருச்சி மாவட்டத்தில் உள்ள வாய்க்கால்களை தூர்வார வேண்டும், வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், லஸ்கர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்